×

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் காணொளி காட்சி மூலம் ஆஜர்

திண்டுக்கல், ஜூலை 30: திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் தங்கியிருந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 2012 ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முத்துப்பாண்டியன், நிர்மலா, ஆறுமுகசாமி, புறா மாடசாமி, பாட்சா என்ற மாடசாமி ஆகிய 5 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள மாநிலம், திருச்சூர் சிறையில் இருக்கும் அருளானந்தம் என்பவர் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Pashupati Pandian ,
× RELATED கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர்...