×

தூய்மை விழிப்புணர்வு பேரணி

கொடைக்கானல், ஜூலை 30:கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகம் சார்பில், 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ‘‘பசுமை இந்தியா தூய்மை இந்தியா’’ என்ற   விழிப்புணர்வு பேரணி நேற்று  நடந்தது. இப்பேரணி கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கி, அண்ணா சாலை வழியாக, மூஞ்சிக்கல்லில் நிறைவுற்றது. முன்னதாக பேரணியை  துணைவேந்தர் வைதேகி விஜயகுமார், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன், பல்கலைக்கழக பதிவாளர் சீலா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பேரணியில்  பதிவாளர் ஷீலா, பேராசிரியர்கள் ராஜம், ஜெபராணி மற்றும் மாணவிர்கள் திரளாக உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியை முனைவர்கள் ஜோஸ் கவிதா, தாமரைச்செல்வி ஒருங்கிணைத்து நடத்தினர்.

Tags : Cleanliness Awareness Rally ,
× RELATED வேதாரண்யம் நகராட்சி சார்பில்...