தேவதானப்பட்டி, ஜூலை 29:தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, கெங்குவார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இரவு 10 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் காய்கறி சாகுபடி பயிர்கள், கோடை நெல் சாகுபடி, வாழை, தென்னை, மற்ற இதர சாகுபடி பயிர்களுக்கு இந்த மழை கைகொடுத்துள்ளது. மேலும் இரவு நேரங்களில் புழுக்கம் இருந்துவந்த நிலையில் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.