×

தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் தேமுதிக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்களில் கருப்புத்துணியை கட்டியபடி கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Democrats ,
× RELATED ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து...