×

மண்டைக்காட்டில் பூட்டிய வீட்டில் கைவரிசை: நகை கொள்ளை வழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைது: 30 பவுன் அதிரடி மீட்பு

குளச்சல்: குளச்சல் அருகே மண்டைக்காடு அடுத்த வீட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வீட்டில் இருந்து மாயமான கள்ளக்காதல்ஜோடி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குளச்சல் அருகே மண்டைக்காடு அடுத்த அழகன்பாறை வசந்தபுரத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பேபிசுதா (43). கடந்த ஜனவரி 27ம் தேதி வீட்டை பூட்டி விட்டு பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் சாவியை கொடுத்தார். பின்னர் பெத்தேல்புரத்தில் வசிக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து தாயை பார்த்து விட்டு மறுநாள் வீட்டுக்கு வந்தார்.அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பேபிசுதா மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். அதன் ஒரு பகுதியாக கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் கடந்த 2ம் தேதி பெத்தேல்புரத்தை சேர்ந்த ரெயிலின் ஷர்மிலி என்ற திருமணமான பெண் திடீரென மாயமானது தெரியவந்தது. விசாரணையில் அவருடன் அதே பகுதியை சேர்ந்த ஏரோநாட்டிக்கல் படித்த பபினும் (27) மாயமானது தெரியவந்தது. இதனால் கள்ளக்காதல் ஜோடி மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கள்ளக்காதலர்களை பல்வேறு இடங்களிலும் தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர். இந்த விசாரணையில் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை மடக்கி பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கள்ளக்காதல் ஜோடியை கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.அதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பெத்தேல்புரத்தை சேர்ந்த பேபிசுதா வீட்டில் நகைகள் கொள்ளையடித்து சென்றதாகவும், அதில் சில நகைகளை விற்று ஜாலியாக செலவு செய்ததாகவும் கூறினர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 30 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வீட்ைட உடைத்து நகை கொள்ளையடித்த வழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post மண்டைக்காட்டில் பூட்டிய வீட்டில் கைவரிசை: நகை கொள்ளை வழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைது: 30 பவுன் அதிரடி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mandikad ,Kulachal ,Mandaikkad ,
× RELATED குளச்சல் அருகே நிலபுரோக்கர் வீட்டில் திருடிய வாலிபர் கைது 3 பேருக்கு வலை