ஒட்டன்சத்திரம், ஜூன் 14: திண்டுக்கல் மாவட்டம், மக்கள் அறக்கட்டளை சார்பில், உலக உணவு பாதுகாப்பு தினவிழா தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஊட்டச்சத்து நிபுணர் மேத்யூ, ‘அரசு உணவுப் பொருட்கள் முதலிடம் வகித்து சிறந்த விளங்குவது குறித்தும், அன்றாட வாழ்வில் உணவுப் பொருட்களின் பயன்பாடு குறித்தும் எடுத்துரைத்தார். முடிவில் மகளிர் சுயஉதவி குழு ஒருங்கிணைப்பாளர் ராஜாத்தி நன்றி கூறினார்.