×

போளுவாம்பட்டி வனப்பகுதியில் தூக்கில் ஆண் பிணம்

கோவை, ஜூன் 14:  கோவை ஆலாந்துறையை அடுத்த இருட்டுப்பள்ளம் போளுவாம்பட்டி ரேஞ்சராக வேலை செய்து வருபவர் ராமநாதன் (58). இவருக்கு வனப்பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு 45 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மரத்தில் தொங்கியவாறு இருந்தது. இதையடுத்து அவர் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாக தொங்கிய ஆணின் உடலை மீட்டு சோதனை செய்தனர். அதில் அவர் இறந்து 2, 3 நாட்கள் இருக்கலாம் என தெரியவந்தது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஞ்சர் ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் வனப்பகுதியில் பிணமாக இருந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் அங்கு வந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags : Poluvampatti forest ,
× RELATED கோவை குற்றாலத்தில் ரூ.1.50 கோடியில்...