×

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்

கோவை, ஜூன்.11: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி கையெழுத்து இயக்கம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து கையெழுத்திட்டார். அவரை தொடர்ந்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, துனை மேயர் வெற்றிச் செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில்  மாநகராட்சி துணை கமிஷனர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை ஏற்றனர்.

Tags : Minister ,labor day ,
× RELATED விருதுநகரில் மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!