×

மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, ஜூன் 4: கந்திகுப்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பர்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவியை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கந்திகுப்பம் போலீசில் புகாரளித்தனர். அதில், தங்கள் மகளை நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார்(24) என்பவர் திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Walibar ,
× RELATED மானூர் அருகே வாலிபர் மாயம்