×

கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் நடந்தது கலைஞர் பிறந்தநாளில் சுயமரியாதை திருமணம்

மதுரை, ஜூன்4: மதுரை தெற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் கலைஞர் பிறந்தநாளில் அவரது சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் நடந்தது. கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ. தளபதி எம்எல்ஏ, மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணிபொன்வசந்த், பொறுப்புகுழு உறுப்பினர்கள் வேலுசாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, ஜெயராம், பொன்ேசது உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர். அப்போது மாநகராட்சி 75வது வார்டு ஆண்டாள்புரத்தை சேர்ந்த மகளிரணி உறுப்பினர் மகாலட்சுமி போஸ் மகன் மணிகண்டனுக்கும் அப்பகுதியை சேர்ந்த பிரியாவுக்கும் சுயமரியாதை திருமணத்தை கோ.தளபதி எம்எல்ஏ நடத்தி வைத்தார். பகுதி செயலாளர் மிசாபாண்டியன் ஏற்பாட்டின் பேரில் மணமக்கள் இருவரும் கலைஞர் சிலை முன்பாக மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டலதலைவர்கள் பாண்டிசெல்வி, சரவணபுவனேஸ்வரி, முகேஷ்சர்மா, பகுதி செயலாளர் பொன்வசந்த், நகரமைப்புக்குழு தலைவர் மூவேந்திரன், கவுன்சிலர்கள் காவேரி, ேலாகமணி மற்றும் திராவிடமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Co. Commander ,MLA ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...