×

தச்சநல்லூர் அருகே வயலில் மேய்ந்த ஆடுகள் திடீர் சாவு

நெல்லை: தச்சநல்லூர் அருகே வயலில் மேய்ந்த 9 ஆடுகள் திடீரென செத்து விழுந்தன. நெல்லை தச்சநல்லூர் அருகே வேப்பங்குளம் மணிநகர் பகுதி விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் ஆடுகளை வேப்பங்குளம் வயல்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவர். இதேபோல் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற 9 ஆடுகள் கோபால் என்பவரது வயலில் திடீரென செத்து விழுந்தன. மேலும் ஒரு சில மாடுகளும் வாயில் நுரைதள்ளிய மயங்கி விழுந்துன. தகவலறிந்து விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதனிடையே இறந்து போன ஆடுகளின் உரிமையாளர்களான சப்பானி, வேலுச்சாமி, பெருமாள் ஆகிய மூவரும் தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், ஆடுகள் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dachanallur ,
× RELATED தச்சநல்லூர் பகுதி சாலையில் குழாய்...