×

ஜெயங்கொண்டம் அருகே விவசாயிகளுக்கு ரூ.6.17 லட்சத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கல்

ஜெயங்கொண்டம், ஜூன் 2: ஜெயங்கொண்டம் ஒன்றியம், பிச்சனூர் ஊராட்சி பூவாய்குளம் கிராமத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டுப்பண்ணையத் திட்டம் 2021-22ன் கீழ் ரூ.6.17 லட்சம் மதிப்பீட்டில் சுழற்கலப்பை, களை எடுக்கும் கருவி ஆகிய வேளாண் உபகரணங்களை உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு, எம்எல்ஏ., க.சொ.க.கண்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தனசேகர், வேளாண் உதவி இயக்குனர் கீதா, வேளாண் அலுவலர் மகேந்திரவர்மன், உதவி வேளாண் அலுவலர் கவிதா, ஒன்றிய குழு துணைத் தலைவர் லதா கண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் கருணாகரன் மற்றும் கிளை நிர்வாகிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Jayankondam ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...