×

வடுவூர் அருகே தூக்கில் சடலமாக தொங்கிய பெண்

மன்னார்குடி, மே 30: வடுவூர் அருகே அடையாளம் தெரியாத மரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகத்திற்குட்பட்ட வடுவூர் மேல்பாதி கிராமம் வழியாக செல்லும் வடவாறு ஆற்றங்கரையில் உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாக தொங்குவதாக அவ்வழியே சென்ற கிராம மக்கள் வடுவூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்த பெண் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சடலத்தை போலீசார் கைப்பற்றி மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், வடுவூர் மேல்பாதி விஏஓ சுமதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து, வடுவூர் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி கூறுகையில், இறந்த பெண் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. அவர் தனது கழுத்தில் சிகப்பு நிற கயிற்றில் ருத்ராட்சம் அணிந்துள்ளார். வலது கை மணிக்கட்டு அருகில் பாபா சிம்பலும் மற்றும் முதுகின் மேல் பகுதியில் சூலாயுதம் சிம்பலும் பச்சை குத்தப்பட்டு உள்ளது. வெளிர் நீல நிற சுடிதார் டாப் மற்றும் வெள்ளை நிற லெக்கின்ஸ் பேன்ட் மற்றும் வெள்ளை நிற பூபோட்ட சுடிதார் துப்பட்டா அணிந்துள்ளார். எனவே, இப்பெண் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் வடுவூர் காவல் நிலையம் 9498100886, வடுவூர் காவல் ஆய்வாளர் 9498162364 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Tags : Vaduvoor ,
× RELATED வடுவூரில் ஆலோசனை கூட்டம் நீர்நிலை...