×

சீர்காழி நகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல்

சீர்காழி, மே 28: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டு உறுப்பினர்கள் இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் நிலைக்குழுக்களின் உறுப்பினர்கள் தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், துணை தலைவர் சுப்பராயன் முன்னிலையில் மீண்டும் பரபரப்புக்கு இடையே தேர்தல் நடைபெற்றது.

இதில் நியமனக்குழு உறுப்பினராக 23வது வார்டை சேர்ந்த ரேணுகாதேவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஒப்பந்த குழு உறுப்பினராக 11வது வார்டு உறுப்பினர் ராஜேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வரிவிதிப்பு மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக கலைச்செல்வி, நித்யாதேவி, சூரிய பிரபா, முபாரக் அலி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதனிடையே ஒப்பந்தக்குழு உறுப்பினராக தேமுதிகவை சேர்ந்த ராஜசேகரன் போட்டியிடுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபாலனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் பிழை இருப்பதாக ராஜசேகரன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் மற்ற நிலைக்கு குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபாலன் முறைப்படி அறிவித்தார் கூட்டத்தில் மேலாளர் காதர்கான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் செல்லதுரை கலந்து கொண்டனர்.

Tags : Committee ,Sirkazhi Municipality ,
× RELATED சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ...