×

வடமதுரையில் ரூ.4.5 கோடியில் குளத்தை தூர்வார பூமிபூஜை காந்திராஜன் எம்.எல்.ஏ பங்கேற்பு

வடமதுரை, மே 27: வடமதுரையில் சுமார் 4.50 கோடியில் பாரம்பரியமிக்க மந்தைகுளத்தை தூர்வாரி பொதுமக்கள் நடைபயிற்சி மேடை அமைக்க, வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வடமதுரை பேரூர் கழக செயலாளர் கணேசன் மற்றும் வடமதுரை பேரூராட்சி தலைவர் நிருபா ராணி கணேசன், வடமதுரை ஒன்றிய திமுக செயலாளர் சுப்பையன், அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன் மற்றும் வட மதுரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

       எம்.எல்.ஏ காந்திராஜன் பேசுகையில், ‘குடகனாறு அணை நீர்த்தேக்கம் 19 அடியாக உள்ளது. ரூ.100 கோடியில் குடகனாறு அணையை மேம்படுத்தவும், 27 அடி வரை நீர்த்தேக்கம் உயர்த்தப்படும். வேடசந்தூரில் உழவர் சந்தை அமைக்கப்படும் மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். வடமதுரையில் பஸ்நிலையம் அமைக்கும் கோரிக்கை முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். தொகுதி மக்களுக்கு இன்னும் 7 மாதங்களில் காவிரி குடிநீர் கிடைக்கும். ரூ.95 கோடியில் புதிய நீர்த்தேக்கத் தொட்டிகள், ராட்சத மோட்டார்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Kandirajan ,MLA ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு