×

துணை தாசில்தார், விஏஓ சஸ்பெண்ட்

மானாமதுரை, மே 20: மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக இருப்பவர் சேகர், தெ.புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் முத்துக்குமார். இவர்கள் இருவரும் தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை சிலர் பெயருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தெ.புதுக்கோட்டை கிராமத்தினரும், பாதிக்கப்பட்ட தனியார் நில உரிமையாளர்களும் கலெக்டரிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் மண்டல துணை தாசில்தார் சேகர், தெ.புதுக்கோட்டை விஏஓ முத்துக்குமார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags : Deputy ,Dasildar ,
× RELATED விதை நேர்த்தி செய்தால் வறட்சியினை தாங்கி அதிக விளைச்சல் பெறலாம்