×

பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில், இன்று திமுக பொதுக்கூட்டம்

கோவை, மே 20: கோவை மாநகர் கிழக்கு  மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று (20ம் தேதி) மாலை 6 மணி அளவில் பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில்  கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  நடக்கிறது. தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தலைமை தாங்குகிறார்.  
நான் (நா.கார்த்திக்) வரவேற்று பேசுகிறேன். பகுதி பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியம், நாகராஜ், சேரலாதன்,  எம். சாமி , சிங்கை மு.சிவா,  சேக் அப்துல்லா,   சேதுராமன்,  பசுபதி,  மார்க்கெட் மனோகரன்,  பத்ரூதீன், மாடசாமி, துரைசாமி, சபரிதன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். முனைவர் சபாபதி மோகன், ஆலங்குடி செல்வராஜ்  அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

கூட்டத்தில் கழக சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி,  மேயர்  கல்பனா ஆனந்த் குமார்,  மாநில இளைஞரணி துணை செயலாளர் பி. பைந்தமிழ் பாரி,   தலைமை செயற்குழு உறுப்பினர் மெட்டல் கண்ணப்பன், துணை மேயர்  வெற்றிசெல்வன், சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எம்.தண்டபாணி, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் கோகுல்  கிருபா சங்கர், மாநில தீர்மானக்குழு மு.இரா. செல்வராஜ், மாநில  இலக்கிய அணி துணை செயலாளர் அ. திராவிடமணி மற்றும் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், நிலைக் குழுத் தலைவர்கள், சிங்காநல்லூர், கோவை தெற்கு தொகுதி மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக பொறுப்பாளர்கள்,பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள்  மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துனை அமைப்பாளர் ஆர்.தனபால் நன்றி கூறுகிறார்.  இந்தப் பொதுக்கூட்டத்தில் கழக அனைத்து நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள்  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : DMK ,Peelamedu Bakery ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி