×

கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, பணம் திருட்டு

கிருஷ்ணராயபுரம், மே 14: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் திருட்டுப்போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை கொடிக்கால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (61). இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார்.இவர் கடந்த 5ம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் திருச்சி சென்று விட்டு மீண்டும் மறுநாள் காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 சவரன் சவரம் தங்க நகைகள், 25 ஆயீரம் ரூபாய் பணம் ஆகியவை மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து ஜெயச்சந்திரன் லாலாபேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Krishnarayapuram ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன்...