×

வாலிபரிடம் பணம் பறித்த 4 பேர் கைது

நெல்லை, மே 13:   முன்னீர்பள்ளம் அருகே வாணியன்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (41). தனியார் ஊழியரான இவர் கடந்த 8ம் தேதி பிராஞ்சேரி அருகே பைக்கில் வந்த போது அங்கு வந்த தச்சநல்லூரைச் சேர்ந்த லட்சுமணபெருமாள் (21) தனது பைக்கிற்கு பெட்ரோல் வாங்குவதாக கூறி யோகேஷ்வரனுடைய பைக்கில் ஏறி தருவை அருகே அழைத்துச் சென்றார். அங்கு நின்ற லட்சுமணப் பெருமாளின் கூட்டாளிகளான தச்சநல்லூர், ராமசுப்பிரமணியன் (26), தருவை அய்யப்பன் (36) மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அரிவாளால் மிரட்டி யோகேஸ்வரனிடம் ரூ. 500, செல்போன் பறித்துச் சென்றனர். வழக்குப் பதிந்த முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் இதில் ஈடுபட்ட லட்சுமணப்பெருமாள் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்