×

அதிகாரி அறிவுறுத்தல் திருக்காட்டுப்பள்ளியில் கழிவுநீர், மழைநீர் செல்ல முடியாமல் பாதை ஆக்கிரமிப்பு


திருக்காட்டுப்பள்ளி, மே 11: திருக்காட்டுப்பள்ளி பூதலூர் சாலையில் சாக்கடை நீர், மழைநீர் செல்ல முடியாமல் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் முன்னிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி பூதலூர் சாலையில் கிறிஸ்தவ தெருவிற்கு செல்லும் சாக்கடை கழிவுநீர் மற்றும் மழை நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதை தனியார் ஆக்கிரமிப்பினால் தண்ணீர் செல்ல முடியாமல் அப்பாதை அடைக்கப்பட்டிருந்தது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு பூதலூர் தாசில்தார் பிரேமா, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சித் தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன், ஆர்.ஐ, விஏஓ மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், திமுக நகர செயலாளர் ஜெயராமன் வந்து பார்வையிட்டனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை பொதுப்பணித்துறை வாய்க்கால் மற்றும் கழிவுநீர் செல்வதற்கான பாதை ஆகியவற்றை முறையாக அளந்து ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள தாசில்தார் உத்தரவிட்டார். மேலும் ஒரு சில தினத்தில் இந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உரிய முறையில் அனைத்து அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.

Tags : Thirukattupalli ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி பூதமணியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை