×

பொன்னமராவதியில் இருந்து ஆலவயல் வழியாக அரசு பேருந்து இரவு நேரத்தில் இயக்க வேண்டும்

பொன்னமராவதி,மே11: பொன்னமராவதியில் இருந்து ஆலவயல் வழியாக இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தினை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதியில் இருந்து இரவு மணி 9.10க்கு ஆலவயல் பாலகுறிச்சி வழியாக திருச்சி வரை அரசு பேருந்து இயக்கப்பட்டது. அதுபோல் மறுநாள் காலையில் 3 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு அதே வழித்தடங்களில் அதிகாலை 5 மணிக்கு பொன்னமராவதி வந்தது. இந்த பேருந்தினால் சென்னை, கோவை, திருவண்ணாமலை, திருப்பூர் போன்ற வெகு தூரத்தில் பயணிக்க மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி பேருந்து நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் திருச்சி வரும் பயணிகள் அதிகாலை 4.40 வரை காத்து இருக்கும் சூழல் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் அதே நேரத்தில் அதே வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்தினை இயக்க வேண்டும். மேலும் கூடுதலாக அதிகாலை 5 மணிக்கு திருச்சியில் இருந்து பொன்னமராவதிக்கு பேருந்து இயக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, சுப்பிராயபட்டி, கலிங்கப்பட்டி, பாலகுறிச்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnamaravathi ,Alavayal ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...