×

பொன்னாக்குடியில் சிலம்பு போட்டியில் வென்றோருக்கு பரிசு பாளை யூனியன் சேர்மன் வழங்கினார்

நெல்லை, மே 10: பாளை அருகே பொன்னாக்குடியில் நடந்த தற்காப்பு கலையான சிலம்பு போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பாளை யூனியன் சேர்மன்  கே.எஸ். தங்கபாண்டியன் பரிசுகள் வழங்கினார். பாளை அருகே பொன்னாக்குடியில் ஆதிதமிழர் சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி பள்ளி சார்பில் வீரர், வீராங்கனைகளுக்கு சிலம்பு உள்ளிட்ட தற்காப்பு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. பாளை ஒன்றிய கவுன்சிலர் பொன்னாக்குடி நம்பிராஜன் வரவேற்றார். இதில் வீரர், வீராங்கனைகளான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றிபெற்றோருக்கு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாளை தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், யூனியன் சேர்மனுமான கே.எஸ். தங்கபாண்டியன் பரிசு மற்றும் சான்று வழங்கி பாராட்டிப் பேசினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் முன்னீர்பள்ளம் செல்வசங்கர், திமுக ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சிவந்தி இசக்கி பாண்டியன், சிலம்பு சுந்தர் பலவேசம், கோபால் கோசி, வேலாயுதம் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், ஊர் மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. ஏற்பாடுகளை ஆதி தமிழர் சிலம்பம் பள்ளி ஆசான் எஸ்.எஸ். காஜா உசேன் வாத்தியார் செய்திருந்தார்.

Tags : Union Chairman ,Ponnakudi ,
× RELATED குளத்தூரில் புதிய கலையரங்கத்திற்கு அடிக்கல்