×

மதுராந்தகத்தில் சமத்துவ நல்லிணக்க நோன்பு திறப்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் நகர தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி மதுராந்தகம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. நிர்வாகி முகமது ரபி தலைமை தாங்கினார். முஸ்தபா, நூர்முகமது, ஜெய்னுலப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் அமானுல்லா வரவேற்றார். காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் ஆகியோர் கலந்துகொண்டு, 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுடன் கூடி அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினர். நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் குமார், மதுராந்தகம் நகர மன்ற துணைத்தலைவர் சிவலிங்கம், மதுராந்தகம் ஒன்றிய செயலாளர்கள் சத்தியசாய், பொன்.சிவக்குமார் கொண்டனர். விசிக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் ஆதவன், அனைத்து வணிகர்கள் பொதுநல சங்க தலைவர் பிரபாகரன், வணிகர் சங்க தலைவர் மீரான், காங்கிரஸ் நகர தலைவர் கோதண்டராமன்,  பொறுப்பு குழு தலைவர் சலீம் பாஷா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Equality Reconciliation Fast ,Madurantakam ,
× RELATED லாரி மீது தனியார் பேருந்து உரசியதால் 4...