×

சாயர்புரம் போப் கல்லூரி செயலாளராக லே செயலர் கிப்ட்சன் பொறுப்பேற்பு

ஏரல், ஏப்.25:  தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் பிரதம பேராயரின் ஆணையராக ஜோசப் பொறுப்பேற்றார். அவர் திருமண்டலத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளுக்கு தாளாளர், செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டார். அதன்படி சாயர்புரம் போப் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளராக திருமண்டல லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் திருமண்டல உபதலைவர் தமிழ்செல்வன், குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக், திருமண்டல பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்கர் அற்புதராஜ், குருவானர்கள் டேவிட்ராஜ், வெலிங்டன் ேஜாசப், பாஸ்கரன், எமில்சிங், ஜேசன் தர்மராஜ், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் தாளாளர் ஜான்சன் டேவிட், சாயர்புரம் போப் பிஎட் கல்லூரி தாளாளர் சாலமோன் பொன்ராஜ், நர்சரி பள்ளி தாளாளர் சுதாகர் மைக்கேல் செல்வகுமார், திருமண்டல செயற்குழு, பெருமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். கல்லூரியின் செயலாளர் கிப்ட்சனுக்கு கல்லூரி முதல்வர் இம்மானுவேல் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Gibson ,Sawyerpuram Pope College ,
× RELATED ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகள் தொடக்கம்