×

ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

நாகர்கோவில், ஏப்.3: ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகளை ரோஜாவனம் கல்வி குழும தலைவர் டாக்டர் அருள்கண்ணன் தொடங்கி வைத்தார். துணை தலைவர் அருள்ஜோதி, கல்வி குழு இயக்குநர் சாந்தி, நிதிக்குழு இயக்குநர் சேது, ரோஜாவனம் கல்வி ஆலோசகர் கிப்சன் சாமுவேல் ராஜன், பள்ளி முதல்வர் காமராஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி குழந்தைகளின் திறன் மேம்படும் வகையில் கோடை காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க ரோஜாவனம் பள்ளியில் யோகா, சிலம்பம், செஸ், அபாக்கஸ், ஓவியம் வரைதல், கையெழுத்து பயிற்சி, நடனம், இந்தி உள்ளிட்ட வகுப்புகளுடன் குதிரை சவாரி பயிற்சி, ஸ்கேட்டிங், வில் வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது. தொடக்க விழா நிகழ்ச்சியில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராணி, பள்ளி நிர்வாக மேலாளர் சரவணகுமார், அலுவலக செயலாளர் சுஜின், துணை முதல்வர் அஜிதா குமாரி, ஒருங்கிணைப்பாளர் யூஜினி, நன்னடத்தை ஆசிரியர் ராஜன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Rojavanam International ,School ,Nagercoil ,Dr. ,Arulkannan ,Rojavanam Education Group ,Rojavanam International School ,Vice President ,Aruljyoti ,Education Committee ,Shanti ,Finance Committee ,Sethu ,Rojavanam ,Gibson ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...