×

கொரடாச்சேரியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

நீடாமங்கலம், ஏப்.25: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் வட்டார அளவிலான கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். எம்பி செல்வராஜ், கொரடாச்சேரி ஒன்றிய துணை தலைவர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் வரவேற்றார். சுகாதார துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி திட்ட விளக்கவுரையாற்றினார்.
முகாமில் ஒன்றியகுழு தலைவர் உமாபிரியா பாலச்சந்தர், மாவட்ட ஊராட்சி துணைதலைவர் கலியபெருமாள், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி செல்வகுமார், துணைத்தலைவர் தளபதி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலரககள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாமில் தாய் சேய் நலம், மகப்பேரு மருத்துவம், இந்திய முறை மருத்துவம் (சித்த, யுனானி, ஹோமியோபதி), சிறப்பு பொது மருத்துவம் (சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம்), எலும்பு மூட்டு சிகிச்சை, காது மூக்கு, தொண்டை மருத்துவம், பல், கண், தோல், புற்று நோய் மருத்துவம்,ஐசிடிசி சேவைகள்,இரத்த பரிசோதனைமற்று இசிஜி, கொரோனா தடுப்பூசி முகாம் உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று இலவச மருந்து, மாத்திரைகள் பெற்றுச்சென்றனர். கண்ணொளி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர், பெரும்பண்ணையூர் ஆரம்ப சுகாதார நிலையம் செய்திருந்தனர். டாக்டர் நித்யா நன்றி கூறினார்.

Tags : Koradacheri ,
× RELATED தமிழ்நாட்டுக்கு எதையும் தராத...