×

தமிழ்நாட்டுக்கு எதையும் தராத மோடிக்கு தமிழ்நாட்டு மக்களும் தனது வாக்கை தர மாட்டார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவாரூர்: இந்தியாவின் அத்தியாயத்தில் புதிய வரலாற்றை எழுத்தக்கூடிய கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது என திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவாரூரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் கூறியதாவது:
நானும் டெல்டாக்காரன் என்ற பெருமையோடு சொந்த மண்ணுக்கு வந்துள்ளேன். உங்களில் ஒருவனாக உங்களிடம் உரிமையோடு வாக்குகள் கேட்டு வந்துள்ளேன். இந்திய அத்தியாயத்தில் புதிய வரலாற்றை இந்தக் கூட்டம் படைக்க உள்ளது. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.

இந்தியாவில் உள்ள எல்லா கட்டமைப்புகளை பா.ஜ.க. அரசு சிதைத்து விட்டது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம் இருக்காது. நாட்டில் மாநிலங்களும் இருக்காது. பா.ஜ.கவின் பாணி ஒரு சர்வாதிகாரம்; காஷ்மீர் நிலை தமிழகத்திற்கும் நேரலாம்.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்கிறார்.

தமிழ்நாட்டுக்கு எதையும் தராத மோடிக்கு தமிழ்நாட்டு மக்களும் தனது வாக்கை தர மாட்டார்கள். தன்னை எதிர்க்க யாரும் இல்லை என்று இருந்தவரின் பிழைப்பை இந்தியா கூட்டனி கெடுத்துவிட்டது. தூக்கத்தில் இருந்து எழுந்த பிரதமர் மோடி தரக்குறைவாக பேசுகிறார். திமுகவினரை தீவிரமாக வேலை செய்ய வைப்பதே இந்த எதிர் தாக்குதல்தான். இதுவரை எந்த ஆளுநரும் உச்சநீதிமன்றத்தால் இவ்வளவு கண்டனத்துக்கு ஆளானது இல்லை. வெக்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் ஆளுநர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதிர்க்கட்சியினரை கைது செய்யும் நடவடிக்கை நடக்கிறது. இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழ், தமிழ்நாடு, தமிழனத்துக்கு விரோதமான கட்சி பாஜக. மாநிலத்துக்கு விரோதமான பாஜக, மாநிலத்தை கண்டுகொள்ளாத அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்த வேண்டும். இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்; ஒளிமயமான எதிர்காலத்தை அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டுக்கு எதையும் தராத மோடிக்கு தமிழ்நாட்டு மக்களும் தனது வாக்கை தர மாட்டார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Modi ,PM K. Stalin ,Thiruvarur ,India ,Koradacheri ,Thiruvaroor ,K. Stalin ,Chief Minister ,Deltakaran ,PM ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...