×

ஒட்டன்சத்திரத்தில் இருவர் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம், ஏப். 21: ஒட்டன்சத்திரம் அருகே சுள்ளெரும்பு, கேத்தம்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல் (39). எலெக்ட்ரீசியன்.  இவர் நேற்று ஒட்டன்சத்திரம் சத்தியநாதபுரத்தில் சரவணனுக்கு சொந்தமான தோட்டத்தில் மின்மோட்டார் சரிசெய்த போது, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். விருப்பாட்சி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (50). இவர் ஒட்டன்சத்திரம் நோக்கி டூவீலரில் சென்றார்.  பழனிக்கவுண்டன்புதூர் அருகே வந்த போது தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்த பவித்ரன் (25) ஓட்டி வந்த கார் மோதியதில், பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு சம்பவங்கள் குறித்தும் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரரித்து வருகின்றனர்.

Tags : Ottanchattaram ,
× RELATED தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்