×

திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தியவர் கைது: 250 கிராம் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புல்லரம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் இருந்த ஒரு நபர் போலீசார் வருவதை கண்டவுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் அதிக போதை தரும் கஞ்சா பொட்டலங்கள் 250 கிராம் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் பறிமுதல் விசாரணையில் பிடிபட்ட நபர் புல்லரம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த முருகன் (47) என தெரியவந்தது. அவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...