மதுரை, ஏப்.20: மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் நாகராஜ்(28). இவர், கடந்த 16ம் தேதி, தெப்பக்குளம் பகுதியில் உள்ள வைகை ஆற்றோரத்தில் டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள மீன்கடை அருகே நின்ற சிலர், நாகராஜை வழிமறித்து தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதில் இவருக்கு காயம் ஏற்பட்டது. தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜை வழிமறித்து தாக்கி, காயப்படுத்திய, ஆனந்த்(21), நவநீதன்(23) சதீஷ்குமார்(22), திருக்குமரன்(22), கண்ணன்(19), அருண்குமார்(19), மற்றும் 17வயது சிறுவன் என 7 பேரை கைது ெசய்தனர்.