×

பல்வேறு வழக்குகளில் தொடர்பு குண்டாசில் 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

தஞ்சை, ஏப்.20: கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி மேலத்தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் அறிவழகன் (21). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்.பி.ரவளிப்ரியா காந்தபுனேனி பரிந்துரையின்பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணங்களின் அடிப்படையில் அறிவழகனை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதையடுத்து அறிவழகன் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவையாறு அந்தோணியார்கோயில் தெருவை சேர்ந்தவர் உபகாரசாமி. இவரது மகன் பிரசன்னா (எ) பால் எமர்சன் (எ) பால் மெர்சன் பிரசன்னா(28). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்.பி.ரவளிப்ரியா பரிந்துரையின்பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணங்களின் அடிப்படையில் பிரசன்னாவை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதையடுத்து பிரசன்னா குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Kundas ,
× RELATED திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் மீது குண்டாஸ்