×

தி.பூண்டி நகர பகுதியில் மழைநீர் வடிகால் பணி

திருத்துறைப்பூண்டி, ஏப். 11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளில் சாலையோரங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க மன்னை சாலை ரயிலடி பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை மழைநீர் வடிகால் அமைக்கவும் மூன்று சிறு பாலங்கள் கட்டவும் சுமார் ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பழைய பேருந்து நிலையம் பகுதியில் மழைநீர் வெளியேற இரண்டு சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை எம்எல்ஏ மாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன். திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

Tags : T. Boondi ,
× RELATED தி.பூண்டி நகராட்சி தேர்தல் மனு தாக்கல் செய்ய அறைகள் ஒதுக்கீடு