×

சோழமாதேவி கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து ரூ.25ஆயிரம் திருட்டு

தா.பழூர், ஏப்.11: சோழமாதேவி கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து ரூ.25 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கடந்த மாதம் 18ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று கோயிலுக்குள் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கிராம மக்கள் தா.பழூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து தா.பழூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Cholamadevi village ,
× RELATED தா.பழூர் சோழமாதேவி கிராமத்தில் கிரீடு...