×

நாகையகவுண்டன்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

உத்தமபாளையம், ஏப். 7: உத்தமபாளையம் ஒன்றியம், நாகையகவுண்டன்பட்டி ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தீபா தலைமை வகித்து. எதிர்வரும் மழைகாலங்களில் மழைநீரை சேகரிப்பது பற்றியும், வீடுகளில் இருந்து வெளியேறும் மழைநீரை தொட்டிகள் அமைத்து சேகரித்தல் பற்றியும் உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகாந்தன் விளக்கி பேசினார். கிராமமக்கள் மத்தியில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், நிலத்தடி நீர் சேகரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் ஊராட்சி துணை தலைவர் சேகர், ஊராட்சி செயலர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rainwater Harvesting Awareness Campaign ,Nagayagaundanpatti ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்