×

நட்டாத்தி-குமாரபுரம் சாலை பணி ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஏரல்,ஏப்.2: நட்டாத்தியில் இருந்து குமாரபுரத்திற்கு ரூ.68.63 லட்சத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
சாயர்புரம் அருகே நட்டாத்தியில் இருந்து குமாரபுரம் செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து  தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.68.63 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்து புதிய தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வைகுண்டம் வட்டார வளர்ச்சி அதிகாரி சுரேஷ், பொறியாளர் பிரேம்சுந்தர், நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா, துணைத்தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், கவுன்சிலர்கள் அன்னக்கனி, சரோஜா, பிரியா, பண்டாரம், மணிமந்திரம், பஞ்சாயத்து செயலர் முத்துராஜ், வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராயப்பன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், வடக்கு வட்டார தலைவர் சொரிமுத்துபிரதாபன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, சாயர்புரம் நகர தலைவர் ஜேக்கப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Urvasi Amirtharaj ,MLA ,Nattathi- ,Kumarapuram ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...