×

வேலாயுதம்பாளையம் அருகே விபத்து வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

வேலாயுதம்பாளையம்,ஏப்.2: கரூர் மாவட்டம் புகளூர் அருகே காட்டூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி( 50). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு இந்த நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தில் வந்து இறங்கி பாலத்துறை அருகே ஓரமாக நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. வாகனம் மோதிய வேகத்தில் சுப்பிரமணி கீழே விழுந்ததில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது .அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் எஸ்ஐ பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Velayuthampalayam ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்