×

போச்சம்பள்ளியில் பூக்கள் விலை உயர்வு

போச்சம்பள்ளி, ஏப்.2: போச்சம்பள்ளியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் யுகாதி பண்டிகையையொட்டி, பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ₹50க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஸ் (கிலோ) ₹150க்கும், ₹300க்கு விற்ற மல்லிகை ₹700க்கும், ₹150க்கு விற்ற முல்லை ₹400க்கும், ₹20க்கு விற்ற சம்பங்கி ₹75க்கும், ₹30க்கு விற்ற சாமந்தி ₹160க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், யுகாதி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கோயில் திருவிழா நடந்து வருவதாலும், பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர். விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...