×

பாபநாசத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

பாபநாசம், மார்ச் 31: பாபநாசத்தில் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.பாபநாசம் புதிய பேருந்து நிலையம் முன்பு கும்பகோணம் கோட்ட கலால்துறை சார்பில் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பாபநாசம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளை கலை நிகழ்ச்சி குழுவினர்கள் நல்லிச்சேரி குமார், ராஜேந்திரன், பாடகர் குமார் ஆகியோர் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

Tags : Counterfeit Awareness Art ,Papanasam ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...