×

திருத்துறைப்பூண்டி நகராட்சி 3வது வார்டில் தூய்மைப்பணி தீவிரம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 3வது வார்டில் மாஸ் கிளீனிங் பணி நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பணியை துவக்கி வைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சி தூய்மை பணியாளர்கள் கச்சேரி ரோடு, குட்செட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மை பணி மேற்கொண்டனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும். சாலையோரங்களில் தெருக்களில் குப்பைகளை கொட்டக்கூடாது திருத்துறைப்பூண்டி நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென்று நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கேட்டு கொண்டார்.

Tags : Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது