×

திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டி, ஏப். 3: திருத்துறைப்பூண்டி போலீஸ் டிஎஸ்பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் நாகை சாலை பைபாஸ் ரவுண்டான அருகில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை நடத்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் தகவல் தெரிவித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

அதை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை விசாரணை செய்ததில் பட்டுக்கோட்டை பூமியான் குலத்தைச் சேர்ந்த முத்தையன் மகன் சந்தோஷ் (27) மற்றும் திருத்துறைப்பூண்டி அரியலூர் மீனாட்சி வாய்க்கால் தெரு சேர்ந்த முருகேசன் மகன் முத்துகிருஷ்ணன் (27) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் ஓடி வந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறைக்கு அனுப்பினர்.

The post திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Tiruthurapoondi Police ,DSP ,Somasundaram ,Inspector ,Marimuthu ,Sub Inspector ,Muthukumar ,Nagai ,Thiruthuraipoondi ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...