×

மாவட்ட சாரண சாரணிய இயக்க பொதுக்குழு கூட்டம்

ஜெயங்கொண்டம், மார்ச்30: பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பாக உடையார்பாளையம் கல்வி மாவட்ட சாரண சாரணிய இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி வழிகாட்டுதலின் படி நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை வகித்தார், ஜெயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எழிலரசி முன்னிலை வகித்தார், உடையார்பாளையம் கல்வி மாவட்ட சாரண சாரணிய இயக்க செயலாளர் பாண்டியன் 2021-2022ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். செந்துறை கல்வி மாவட்ட செயலாளர் சக்திவேல் சாரண இயக்க செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். \”மாணவர்களது ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் மாணவர்களின் அறிவுத்திறன் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு சாரண இயக்கம் துணைபுரிகிறது என ஜெயங்கொண்டம் தலைமை ஆசிரியர் எடுத்துரைத்தார். முன்னதாக செங்குந்தபுரம் அரசு உயர்நிலைபள்ளி சாரண ஆசிரியர் முத்தமிழ்செல்வன் வரவேற்றார். தனியார் மெட்ரிக் பள்ளி சாரண ஆசிரியர் முரளிதரன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடையார்பாளையம் கல்வி மாவட்ட செயலர் பாண்டியன் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சேகர் செய்திருந்தனர்.


Tags : District Scout Operation General Committee Meeting ,
× RELATED பாளையம் புனித யோசேப்பு ஆலய