கிருஷ்ணகிரி, மார்ச் 26: தேய்பிறை அஷ்டமியையொட்டி, கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறிக்கி காலபைரவர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டை தட்சிண காலபைரவர் கோயில், கந்திகுப்பம் கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.