×

பழநி ஜிஹெச்சில் கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் மாற்றுத்திறனாளிகள் மனு

பழநி, மார்ச் 23:     திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநரிடம் (நலப்பணிகள்) மாற்றுத்திறானிகள் சங்கத்தின் சார்பில் நகர செயலாளர் தங்கவேல், பொருளாளர் அய்யனார், மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில், ‘திண்டுக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள பழநி அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. இங்கு அறுவை சிகிச்சைக்காக வருபவர்கள் திண்டுக்கல் அல்லது மதுரை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.   அதுபோல் காது கேளாதோருக்கான செவிப்பரிசோதனை செய்ய ஆடியோ மெட்ரீசியன் நியமித்திட வேண்டும். பழநி அரசு மருத்துவமனையில் நோயாளிகள், பார்வையாளர்களுக்கான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

Tags : Palani GH ,
× RELATED அதிகரிக்கும் காய்ச்சல் பழநி...