×

நமக்கு நாமே திட்டத்தில் பல்லடம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட நிதி வழங்கல்

பல்லடம், மார்ச் 22: பல்லடம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலா ஒரு வகுப்பறை புதிய கட்டடம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது.   பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இது பற்றி அறிந்த பல்லடம் நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் நகரின் வளர்ச்சியிலும் சமுதாய தொண்டிலும் ஆர்வம் கொண்டுள்ளவர்களை அணுகி அரசு பள்ளிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

அதனை ஏற்று தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். பல்லடம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலா ஒரு வகுப்பறை கட்டடம் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்ட நமக்கு நாமே திட்டத்தின் பங்களிப்பு தொகையான ரூ.3.35 லட்சத்திற்கான  காசோலையை விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சிவக்குமார், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடம் வழங்கினார். உடன் நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், நகராட்சி ஆணையாளர் விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Palladam Government School ,
× RELATED பல்லடம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு