×

சிங்கம்புணரியில் மீண்டும் மஞ்சப்பை பேரணி

சிங்கம்புணரி, மார்ச் 17: சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து எஸ்.எஸ்.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரி தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஹேமாமாலினி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக சிங்கம்புணரி பேருராட்சி செயல் அலுவலர்  ஜான் முகமது,  பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து மற்றும் துணை தலைவர் இந்தியன் செந்தில் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், மீண்டும் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Yellowstone ,Singampunari ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...