×

பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவராக சோமசேகர் தேர்வு

பரமத்திவேலூர், மார்ச் 5: பாண்டமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 4 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். மீதமுள்ள 11 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில் மொத்தம் 9 வார்டுகளில் திமுகவும், 5 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். நேற்று நடைபெற்ற தலைவருக்கான தேர்தலில் 15வது வார்டில் போட்டியின்றி தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவை சேர்ந்த டாக்டர் சோமசேகர், போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மதியம் துணைத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் திமுகவை சேர்ந்த பெருமாள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற தலைவர் சோமசேகர், துணைத்தலைவர் பெருமாளை திமுக பிரமுகர்கள், கவுன்சிலர்கள் வாழ்த்தினர்.

Tags : Somasekar ,Pandamangalam ,
× RELATED மாநிலங்களவை தேர்தல்… கூட்டணி கட்சி...