×

மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், தளி பேரூராட்சிகளின் தலைவர்கள் தேர்வு

உடுமலை, மார்ச் 5:  மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், தளி பேரூராட்சிகளின் திமுக வேட்பாளர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், தளி ஆகிய பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் நேற்று நடந்தது. செயல் அலுவலர்கள் தேர்தலை நடத்தினர்.திமுக வேட்பாளர்களாக மடத்துக்குளத்துக்கு கலைவாணி பாலமுரளி, துணைதலைவராக ரங்கநாதன், தளியில் உதயகுமார், துணைதலைவராக மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி செல்வம், குமரலிங்கத்தில் சர்மிளா பானு, துணைதலைவராக அழகர்சாமி. கணியூரில் செந்தமிழ்ச் செல்வி, துணைதலைவராக காங்கிரஸ் ஜெய்னுல் அபுதீன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.4 பேரூராட்சிகளிலும் திமுக அறிவித்த வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அவர்கள் போட்டியின்றி பேரூராட்சி தலைவர், துணைதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்து, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags : Madathukulam ,Kumaralingam ,Kaniyur ,Thali ,
× RELATED குமரலிங்கம் பகுதியில் கன்றுகளுக்கு நோய் தடுப்பூசி