×

நாகை மாவட்டத்தை சேர்ந்தோர் பசுமை சாம்பியன் விருது பெற 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நாகை, மார்ச்.4: பசுமை சாம்பியன் விருது பெற நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படவுள்ளது. தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்யும். விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Nagai district ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...