×

கீழ்வேளூர் அருகே குடும்ப பிரச்னையால் வாலிபர் தற்கொலை

கீழ்வேளூர், மார்ச் 2: நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே கேசவன் ஓடை காந்தி வீதியை சேர்ந்தவர் கேசவன் மகன் அய்யப்பன் (29). கீழ்வேளூர் அருகே ஆந்தகுடி கிராமம் திருப்பஞ்சனத்தை சேர்ந்த நாகராஜன் மகள் நித்தியா (23). இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தம்பதி இருவரும் திருப்பஞ்சனத்தில் தனியாக வசித்து வந்தனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு அய்யப்பன் சடலமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Kizhvelur ,
× RELATED நாகை உழவர்சந்தை கீழ்வேளூரில் 100 நாள்...