×

விக்ரமராஜா வேண்டுகோள் பார்முலா 4 கார் பந்தயம் விஷ்ணு பிரசாத் சாம்பியன் கோவை வீரர் பாலாபிரசாத் மூன்றாம் இடம்

கோவை, மார்ச். 1:  ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2021ன் 4-வது சுற்றின் இறுதி போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியிலுள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை ,திருச்சூர், பெங்களூர், புனே, ஒரிசா , குஜராத் உள்ளிட்ட பல போன்ற பகுதிகளில் இருந்து முன்னனி கார் பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் சனிக்கிழமை (26ம் தேதி)  தொடங்கிய நிலையில் நேற்று (27ம் தேதி) இறுதி போட்டிகள் நடைபெற்றது.

14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், முதல் சுற்று முதலே தனது ஆதிக்கத்தை செலுத்திய சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றினார்.   திருச்சூரை சேர்ந்த தில்ஜித் இரண்டாம் இடத்தையும்,    கோவையை சேர்ந்த பாலாபிரசாத் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஒட்டுமொத்த சாம்பியனாக 70 புள்ளிகளுடன் விஷ்ணுபிரசாத் முதலிடத்தையும், 59 புள்ளிகள் பெற்ற தில்ஜித் இரண்டாம் இடத்தையும், 55 புள்ளிகள் பெற்ற ஆரியா சிங் மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் மூன்றாமிடமும் பிடித்தனர். ராயல் என்பீல்டு இருசக்கர வாகன போட்டியில் அல்வின் சேவியர் முதலிடத்தையும், மெகா விதுராஜ் 2ம் இடத்தையும், அனிஷ் செட்டி 3வது இடத்தையும் பிடித்தனர்.

Tags : Vikramarajah ,4 ,Vishnu Prasad ,Coimbatore ,Balaprasad ,
× RELATED இந்தியா கூட்டணி பிரசாரத்தில் ரகளை பாஜக கவுன்சிலர் மீது வழக்கு